மிருகராஜ்யம்
ஆண் பூனை தன் காதலியிடம்: அன்பே என்னை திருமணம் செய்து கொண்டால் உனக்கு எலி மயமான வாழ்க்கை கிடைக்கும்.

காட்டுப்புலி: எப்படி அந்த ஆசாமி அவன் தலையை உன் வாய்க்குள் வைக்கும் போது கடிக்காம இருக்கே?

சர்க்கஸ் புலி: அய்ய, அவன் தலையை எவன் கடிப்பான்! அவன் தலைக்கு தண்ணீரே விட்டுக்க மாட்டான் போல இருக்கு!

ஆந்தை: டாக்டர் என் கழுத்தை முழுக்க திருப்ப முடியலே. என் மருமகள் என் பின்னாடி என்ன பண்ணறாள்னு பாக்க முடியல்லே...

ஹெர்கூலிஸ் சுந்தரம்

© TamilOnline.com