அன்னை வேளாங்கண்ணி திருவிழா
செப்டம்பர் 5, 2015 அன்று வேளாங்கண்ணி அன்பர் குழாம் (Velankanni Social Community) அன்னை வேளாங்கண்ணித் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. பிற்பகல் 2.30 மணிக்கு லாஸ் ஏஞ்சலஸ் மறைமாவட்டத் துணை ஆயர் மேதகு. வில்கிர்சன் தமிழ்க் கலாசாரப்படி சந்தன, குங்குமத் திலகமிட்டு வரவேற்கப்பட்டார். ஆயரின் மறையுரைக்குப் பின் வேளாங்கண்ணி மாதா கொடியேற்றப்பட்டு அன்னையின் தேர் பவனி வந்தது.

பவனியின் முடிவில் அருட்தந்தை ஆல்பர்ட் பிரகாசம் அவர்களின் தலைமையில் 11 குருக்கள் சேர்ந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். திருப்பலி நல் ஆரோக்கிய வழிபாட்டுடன் நிறைவேறியது. கலைநிகழ்ச்சிகள் மற்றும் அறுசுவை உணவோடு திருவிழா நிறைவுற்றது.

சேவியர்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com