நூல்கோல் மசாலா
தேவையான பொருட்கள்:
நூல்கோல் - 3
பெரிய வெங்காயம் - 4
கொத்துமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் - 5
பச்சைக்கொத்தமல்லி - 1 கட்டு
மஞ்சள்பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
கொத்துமல்லி விதை, மிளகாய், கடலைப்பருப்பு இவற்றைச் சிறிதளவு தண்ணீரில் ஊறப்போடவும். நூல்கோல், வெங்காயம் இரண்டயும் தோல் நீக்கிவிட்டு, பொடிப்பொடியாக நறுக்கி தனித்தனியாக வைக்கவும். கொத்துமல்லியை ஆய்ந்து கழுவிவைக்கவும். முதலில் நூல்கோலை கனமான பாத்திரத்தில், மஞ்சள் பொடி, அளவான தண்ணீர் விட்டு வேகவைக்கவும். (பிரஷர் குக்கரிலும் வைக்கலாம்). வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைப் போட்டுச் சுருளவதக்கி, வெந்த நூல்கோலை அதில் கொட்டி, ஊறவைத்த கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல் அரைத்த விழுதைச் சேர்க்கவும். உப்பு, கொத்துமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். வாசனை கமகமக்கும். பூரி, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ளலாம். தோசைக்குள் வைத்து வார்த்தால் மசாலா தோசைதான். உருளைக்கிழங்கு சேர்க்கக் கூடாதவர்கள் இதைச் சாப்பிடலாம். சுவையும் சூப்பர்.

வசந்தா,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com