சிங்கம்-3


சிங்கம் பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சிங்கம்-2 என்று வெளியானது. தற்போது சிங்கம்-3 உருவாக உள்ளது. சூர்யாவே நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் கதாநாயகிகள். ராதாரவி, நாசர் உள்ளிட்ட பல முன்னணி நடிக, நடிகையர் உடன் நடிக்கின்றனர். அநிருத் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹரி இயக்குகிறார். "இதில், சூர்யா பாதி நல்லவராகவும், மீதி வல்லவராகவும் வருகிறார். இரண்டாம் பாகத்தைவிட, மூன்றாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்னும் கூர்மையாக்கப்பட்டு இருக்கிறது. 'தப்பு பண்ணுகிறவர்களைக் கைது செய்பவர் மட்டும் போலீஸ் அல்ல. தப்பே நடக்காமல் பார்த்துக் கொள்கிறவர்தான் போலீஸ்' என்ற பஞ்ச் டயலாகுடன் வரும் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நான்காவது படம் இது" என்கிறார் ஹரி. சிங்கம்டா!

அரவிந்த்

© TamilOnline.com