பாரதி தமிழ்ச் சங்கம்: இரு நாடகங்கள்
நவம்பர் 22, 2015 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், க்ரியா நாடகக் குழுவுடன் இணைந்து இரு நாடகங்களை ஃப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரி ஸ்மித் அரங்கில் வழங்கவுள்ளது. பிரபல நாடக, திரைப்பட நடிகரும், இயக்குனருமான தீபா ராமானுஜம் இயக்கத்தில் இவை அரங்கேறவுள்ளன. இயக்குனர் பாலச்சந்தருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அவர் எழுதிய நாடகமொன்றும் பிரபல தமிழெழுத்தாளர் இரா. முருகன் எழுதிய ஒரு விஞ்ஞானப் புனைகதையை ஆதாரமாகக் கொண்ட நாடகமொன்றும் அன்று அரங்கேறவுள்ளன.

முன்பதிவுக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் தொடர்புகொள்க
மின்னஞ்சல்: kreacreations@gmail.com
வலைமனை: www.Bharatitamilsangam.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com