விளம்பரம் பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு விழா
கனடாவின் மிகப்பிரபலமான ஆரம்பகாலப் பத்திரிகை 'விளம்பரம்' தனது 25வது ஆண்டு விழாவை ரொறொன்ரோவில் கொண்டாடியது. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், அனுசரணையாளர்கள், உதவியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர். 25 ஆண்டு பூர்த்தியான நாளின் நினைவாக 'அடுத்த காலடி' என்ற மலர் வெளியிடப்பட்டது. ஆழமமும் விசாலமும் கொண்ட கட்டுரைகள், Click Here Enlargeகவிதைகள் நேர்காணல்கள், சிறுகதைகள் என்று மலர் சகல அம்சங்களையும் கொண்டிருந்தது.

பத்திரிகையாசிரியர் பாமா மகேந்திரன் வரவேற்புரை வழங்கினார். பேரா. சேரன் 'பத்திரிகை தர்மம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். திரு. ராஜா மகேந்திரன் சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பிரதம விருந்தினர், கணினித்துறை வல்லுநர் திரு. சுதர்ஸனன் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் சமமின்மை என்ற தலைப்பில் இன்றைய சமுதாயத்துக்குப் பயன்படும் விதமாகப் படவிளக்கங்களுடன் அருமையான உரை நிகழ்த்தினார்.

அப்பாத்துரை முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com