நிருத்ய நிவேதன்: பரதநாட்டியம்
ஜூன் 27, 2015 அன்று மாலை 3:00 மணிமுதல் 6:00 மணிவரை நிருத்ய நிவேதன் நடனப்பள்ளி வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி மில்பிடாஸில் உள்ள ஷீரடி சாய் பரிவார் அரங்கில் நடக்கவுள்ளது. இந்த நடனத்தைக் கண்டுமகிழ நிருத்ய நிவேதன் பள்ளி இயக்குநர் புவனா வெங்கடேஷ் அனைவரையும் அழைக்கிறார். புதுவிதமான புரிதல், புனிதத்தன்மை, வாழ்க்கையின் சிறப்பு ஆகியவற்றை உணரும்படிப் புத்துணர்ச்சியையும் வழங்குவதாக இருக்கும் இந்த நிகழ்ச்சி.

தன்னுள்ளிருக்கும் ஆன்மாவின் அழகைக்கொண்டு தன்னை வடிவமைக்கும் சிறப்பு பரதக்கலைக்கு உண்டு. இதன் ரகசியம், நாம் கடவுளின் பரிணாமங்களைக் காண்பதா அல்லது கடவுளும் மனிதனும் கலந்து உருவாக்கும் பரிமாணம் ஒன்றைக் கடவுள் நமக்கு உணர்த்துவதா? நிகழ்ச்சியைப் பார்த்தால் இந்த நுட்பம் புலனாகும்.

இதில் குரு புவனா வெங்கடேஷ், முதன்மை மாணவியான ஹர்ஷிதா வெங்கடேஷ் மற்றும் பள்ளியின் இளம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு
வலைமனை: www.nrithyanivedhan.com
ஃபேஸ்புக்கில் தொடர: facebook.com/Nrithyanivedhan

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com