கலாலயா: கே.எஸ்.சித்ரா மெல்லிசை
மே 10, 2015 அன்று 'கலாலயா' அமைப்பு ஹேவர்ட் Chabot College அரங்கத்தில் அன்னையர் தினத்தை பத்மஸ்ரீ சின்னக்குயில் சித்ரா குழுவினரின் மெல்லிசை விருந்தோடு கொண்டாடியது. சித்ரா, விஜய் ப்ரகாஷ், ஸ்ரீகிருஷ்ணா, ப்ரியா, ஹைமேஷ் ஆகியோர் செவிக்கினிய பாடல்களை வழங்கியதுடன் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கினர்.

'சிந்து பைரவி' முதல் 'ஓகேகண்மணி' வரையிலான படங்களின் புகழ்பெற்ற 25க்கும் மேற்பட்ட பாடல்கள் அரங்கேறின. சித்ரா பாடிய "மலர்கள் கேட்டேன்", விஜய் ப்ரகாஷ் பாடிய "ஓம் சிவோஹம்", ஸ்ரீ கிருஷ்ணா பாடிய "அம்மா என்றழைக்காத", ப்ரியா பாடிய "Who is the Hero" பாடல்கள் ரசிகர்களைப் பரவசப்படுத்தின. திறமை வாய்ந்த இசைக்குழுவினரும் பாடகர்களும் அருமையான பாடல்களை இசைத்து ரசிகர்களின் மாலைப்பொழுதை ரம்மியமாக்கினர்.

வசந்தி வெங்கடராமன்,
சாரடோகா

© TamilOnline.com