திருட்டுக் கல்யாணம்


பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு வாழும் இளஞ்சோடியைப் பற்றிக் கூறுகிறது திருட்டுக்கல்யாணம். கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகமும், நாயகியாக தேஜஸ்வீயும் அறிமுகமாகின்றனர். கே. பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக இருந்த ஷக்திவேலன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்குகிறார். முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், தம்பிராமையா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் A.வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இசை: வைத்தி. "கல்லூரியில் படிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போகிறார்கள். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளிதான் பல பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதை இதில் பதிவு செய்திருக்கிறோம்' என்கிறார் இயக்குனர். இப்படத்திற்காக சிம்பு, ஆண்ட்ரியா, சன் டி.வி. சூப்பர் சிங்கர் சின்னப் பொண்ணு ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.

அரவிந்த்

© TamilOnline.com