மின்னல்
இது
இயற்கை தரும்
இலவச மின்சாரம்

அது
வழங்கும் தருணமோ
மழைக்கால ரகசியம்

அத்தனை ஆற்றலையும்
கொள்ளவோ கலனில்லை

ஆக்க முடியாதது
கட்டிடங்களின்
இடிதாங்கிகளில்
உச்சிக்கம்பிகளில் அகப்படும்

வானம்
தனது கைரேகைகளை
யாரிடம் காட்டுகிறதோ?

வெளிச்சவலை வீசி
யாரையேனும்
சிறைபிடிக்கப் பார்க்கிறதா?

அங்கே என்ன
ஆகாயம் பிளக்கிறதா?
இல்லை
இருட்டுவெளி உடைபடுகிறது!

மழைநாட்களில்
ஒளிவிழாத காடுகளில்
ஊடுருவிப் பார்க்கிறது
விண்ணகத்துக் காவல்!

உதயகுமார் ஜே,ஆர்

© TamilOnline.com