இர்விங்: பங்குனிஉத்திர விழா
ஏப்ரல் 4, 2015 அன்று பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு டாலஸ் இர்விங் DFW இந்துக்கோவில் முருகன் சன்னிதிக்கு 40 பேர் காவடியும் 50 பேர் பால்குடமும் எடுத்தனர். 350 பேருக்குமேல் விழாவில் பங்கேற்றனர். விழாவின் தொடர்ச்சியாக ஏப்ரல் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு 8.5 மைல் நடைப்பயணம் மேற்கொண்டனர். சிலர் செருப்பு அணியாமல் நடந்து சென்றனர். இர்விங் சிம்மரன் பார்க்கிலிருந்து காலை 8:30 மணி அளவில் புறப்பட்ட குழுவினர், சுமார் 4 மணிநேரம் நடந்து 1 மணி அளவில் கோவிலை அடைந்தனர். இர்விங் போலீஸ் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். கோவிலையடைந்த பின் கந்தசஷ்டி கவசம் பாடிய பிறகு, சிறப்பு பூஜை நடைபெற்றது. பிரசாதத்துடன் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com