நாதலயா: கலை நிகழ்ச்சி
ஏப்ரல் 5, 2015 அன்று சாய்பாபா ஆலயத்தில் 'நாதலயா இசைப்பள்ளி' மாணவர்கள் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. சுலோகம் பாடி நிகழ்ச்சி துவங்கியது. இடைநிலை, கடைநிலை மாணவர்கள் உயர்நிலை மாணவர்களுடன் இணைந்து சிவா-சக்தி பாடல்களைப் பாடியவிதம் வெகு அழகு. பாரதியாரின் ஓம் சக்தி பாடல்களை நாட்டுப்புற மெட்டில் பாடியது மனதைக் கவர்ந்தது.

பள்ளியின் நடத்துனர் மிருதங்க வித்வான் ஸ்ரீராம் ப்ரம்மானந்தம், அவரது துணைவியார் சாந்தி ஸ்ரீராம், மகன் அருண் ஸ்ரீராம் ஆகியோரின் மிருதங்கமும் அபர்ணா தியாகராஜனின் வயலினும் அருமை. குரு சாந்தி ஸ்ரீராம் இயற்றிய மங்கள இசையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அன்பர்கள் அளித்த நன்கொடை ராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு வழங்கப்பட்டது.

கலா ஞானசம்பந்தம்,
பாலோ அல்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com