ந்ருத்யகல்யா: 'பஞ்சகன்யா'
மே 30, 2015 அன்று ந்ருத்யகல்யா டான்ஸ் கம்பெனியின் ஜனனி நாராயணன் 'Panchakanya - weaving new destinies' என்ற நடன நிகழ்ச்சியை சன்னிவேல் நிகழ்கலை அரங்கில் (SAT, 550 E. Remington Drive, Sunnyvale, CA- 94087) வழங்குகிறார். இந்தியக் காவியங்களின் உன்னதமான ஐந்து நாயகியரான அகல்யா, குந்தி, திரௌபதி, தாரா, மண்டோதரி ஆகியோரின் வாழ்க்கைகளில் ஏற்படும் சிக்கல்களையும், அவை எவ்வாறு அவர்களை புதுவழிகளில் கொண்டு செல்கின்றன என்பதையும் நடனமாக இந்நிகழ்ச்சி சித்திரிக்கிறது.

ராமாயண, மகாபாரத காவியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்கு ஸ்னிக்தா வெங்கடரமணி இசையமைத்துள்ளார். ஜனனி நாராயணன் மார்க்க பாணியில் நடன வடிவமைத்துள்ளார். ஸ்னிக்தா (பாட்டு), சேதனா சாஸ்திரி (நட்டுவாங்கம்), ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்), ஸ்ரீவித்யா நாராயணன் (வீணை) எனச் சிறப்பான விருந்தாக நிகழ்ச்சி அமையும்.

நுழைவுச்சீட்டு - $15
சீட்டு வாங்க: www.nrityakalya.org
மின்னஞ்சல்: nrityakalyadance@gmail.com

ஸ்ரீனிவாசன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com