ஸ்ரீக்ருபா: 'ராமம் குணாபி ராமம்' நாட்டிய நாடகம்
மே 24, 2015 அன்று மாலை 3:30 மணிக்கு, சாரடோகா மெக்கஃபீ ஆடிட்டோரியத்தில் ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி தயாரித்து வழங்கும் "ராமம் குணாபி ராமம்" என்கிற நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி, 'Voice of a Child' மற்றும் 'The Banyan' என்ற 501(c) அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்குத் தரப்படும்.

ராமாயணத்தின் தொடக்கத்தில், வால்மீகி தன்னைப் பார்க்கவரும் நாரதரிடம் முழுமுதற் பொருளுக்கு இணையான பதினாறு கல்யாண குணங்களும் கொண்ட மனிதன் பூவுலகில் இருக்கிறானா என்று கேட்க, அவர் அப்படிப்பட்ட ஸ்ரீராமன், அயோத்தியை ஆண்டுகொண்டிருப்பதைச் சொல்லுகிறார். வால்மீகியும் நிறைவுடன், ஆதி காவியமாம் ராமாவதாரத்தை எழுதி முடிக்கிறார். கவிவாக்கும் பொய்க்குமோ? அந்தப் பதினாறு குணங்கள் உடையவனாக ராமனை வால்மீகி எப்படிச் சித்திரித்திருக்கிறார் என்பதை இந்த நாட்டிய நாடகம் அழகுற விவரிக்கிறது.

நிகழ்ச்சி வடிவமைப்பு, நாட்டிய உருவாக்கம் இரண்டையும் குரு ஸ்ரீமதி விஷால் ரமணியும், பாடல், இசையமைப்பு இவற்றைத் திரு. அஷோக் சுப்ரமணியமும் செய்திருக்கிறார்கள்.

நுழைவுச்சீட்டு: $20

சீட்டு வாங்க:
சிரீஷா: 408-623-1234; salve.india@gmail.com
முரளி: 408-623-1299; murali.vemulapalli@gmail.com
ராஜா: 408-605-6249; rajaxml@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com