Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
சரித்திரம் படைக்கவேண்டும்
- ஞானசேகரன்|ஆகஸ்டு 2014|
Share:
நிதிதனை இழக்கலாம் நிம்மதி துறக்கலாம்
நியதிதனை மறக்கலாமோ
நெஞ்சமதில் கருமைதனை கொள்ளவுந் துணிவதோ
நீசனென் றாகத் தகுமோ?

விதியிடம் தோற்கலாம் வெற்றியை இழக்கலாம்
வெம்பிமனம் தளரலாமோ?
வீணாகும் வாழ்வெலாம்; வேண்டாத குணமதாம்
விரக்தியைக் கொள்ளலாமோ?

சதிதன்னை வென்றிடும் உறுதியைக் கொண்டிட்டு
சாதனை புரியவேண்டும்;
சாதனை செய்தபின் காணுவோர் போற்றிட
சரித்திரம் படைக்க வேண்டும்

மதிதன்னைக் கொண்டபலன் விதிதன்னை வெல்வதே
மகிமையிதை உணரவேண்டும்;
மாண்புற்ற வாழ்வினைக் கொள்பவன் தானென்றும்
மானிடன் என்றாகுவான்!
ஞானசேகரன்,
செர்ரி ஹில், நியூ ஜெர்ஸி
Share: 




© Copyright 2020 Tamilonline