Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
விண்வெளி வீராங்கனையின் வருகை
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
குளுகுளு சிறைச்சாலை
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
- அரவிந்த்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeபல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சென்னை குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, தனது டிரஸ்ட் மூலம் இருநூறு கோடி ரூபாய் செலவில் சிறப்பாகக் கண்டலேறு-பூண்டி கால்வாயை அமைத்துக் கொடுத்ததற்காக ஸ்ரீ சத்யசாயிபாபாவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் பாராட்டு விழா நடத்திய போது தமிழக முதல்வர் கருணாநிதி அங்கேயே ஒரு வேண்டுகோளை வைத்தார். 'கூவம் நதியைத் தூய்மைப்படுத்த ஸ்ரீ சத்ய சாயிபாபா உதவ வேண்டும்' என்பதே அது. அங்கேயே ஆவன செய்வதாக உறுதி அளித்தார் ஸ்ரீ சத்யசாயி பாபா. மீண்டும் செப்டம்பர் பாபாவைச் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் இதற்காக மீண்டும் வேண்டிக்கொள்ள, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டார் ஸ்ரீ சத்யசாயி பாபா. அவரது ஆலோசனையின் படி வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று விரைவில் சென்னை வந்து கூவம் நதியைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. அதன் நீளம், அதனை மேம்படுத்த ஆகும் செலவுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு, திட்ட முன்வரைவைத் தயாரித்து ஸ்ரீ சாயிபாபாவிடம் அளிக்க உள்ளது. அதேசமயம் கூவம் நதிக்கரையின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மென்மேலும் கழிவுநீர் வந்து அதில் கலக்காமல் தடுத்தல், கழிவு நீர் நிரந்தரமாக வெளியேற்றப்பட மாற்று ஏற்பாடுகள் செய்தல் போன்றவற்றை அரசே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட தி.மு.க அரசின் நீண்ட நாள் கனவு, கடவுளின் அவதாரமாகப் பலரால் கருதப்படும் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் உதவியோடு விரைவில் நிறைவேற உள்ளது.
அரவிந்த்
More

விண்வெளி வீராங்கனையின் வருகை
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
குளுகுளு சிறைச்சாலை
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline