Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
மக்சேசே விருது
குடியரசு துணைத்தலைவர்
தண்டிக்க அதிகாரம் யாருக்கு
டாடா தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
- அரவிந்த்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeநெல்லை மற்றும் தூத்துக்குடியில் புதியதாக டாடா நிறுவனம் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை ஒன்று தொடங்கத் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. இத்தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை அரசு தொடங்கியது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்க்கத் தொடங்கினர். அது போதாதென்று பா.ம.க., கம்யூனிஸ்ட், அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் எதிர்த்துக் களத்தில் குதித்தன. விஷயம் இதுதான். தொழிற்சாலை தொடங்க உத்தேசித்திருக்கும் பகுதிகள் 'தேரி' என்றழைக்கப் படும் செம்மண் பூமியைக் கொண்டவை. இந்த மண்ணில் இல்மனைட் என்ற தாதுப்பொருள் கிடைக்கிறது. இதிலிருந்துதான் பெயிண்ட் தயாரிக்கப் பயன்படும் டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்கப்படுகிறது.
இந்தத் தொழிற்சாலை வந்தால் தென் பகுதிகளில் தொழில் வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், சமூக பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால் இதை எதிர்ப்பவர் கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை மக்கள் விரும்பவில்லை என்கிறார்கள். தினந்தோறும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு வகைப் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதனைக் கண்டு முதல்வர் கருணாநிதி 'அரசின் நல்ல திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள் எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார்' என்று சோகத்துடன் அறிவித்திருக்கிறார்.

அரவிந்த்
More

மக்சேசே விருது
குடியரசு துணைத்தலைவர்
தண்டிக்க அதிகாரம் யாருக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline