Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
எப்போதும் கிறுக்குவதில்லை......
யூஸ் அன்ட் த்ரோ
ஆறடி நிலம்
- அலர்மேல் ரிஷி|ஜூலை 2001|
Share:
Click Here Enlargeமுன்னொரு நாளில் மன்னவ னொருவன்
நகர்வலம் வருகையில் ஆங்கோர் வயலில்
உழவன் ஒருவன் நாற்றுநடக் கண்டான்
"ஐயா நலமா?" என்றே வினவ,
உழவன் சோர்வுடன் "நலமென்ப தெல்லாம்
செல்வர்க் கன்றோ எங்களுக் கேது?"
என்றே கூறினான் விரக்தி மேலிட
"செல்வந்தனாக ஆசையு முண்டோ?"
என்றே மன்னன் வினவிய போது
"எப்படி முடியும் அதிசயம் ஏதும்
செய்திட உம்மால் இயலுமோ" என்றான்
"உதித்த நேரம் முதலாய்க் கதிரவன்
மறையும் மாலைப் பொழுது வரையிலும்
உம்மால் முடிந்த எல்லையைப் பெரிய
வட்ட மடித்து மீண்டும் திரும்பிட
சம்மதமானால் ஓடிய எல்லை முழுவதும்
உமக்கே சொந்தமாக்கிடச் செய்வேன்"
உழவனும் மறுநாள் காலையில் தொடங்கி
பெரியதொரு வட்டம் போட்டிட ஓடி
இன்னும் இன்னும் இன்னும் ஓடி
கதிரவன் மறையத் தொடங்கிய வேளை
இன்னும் சற்று ஓடிப் பார்த்தால்
நிலமும் சற்று அதிகம் பெறலாம்
என்றே எண்ணி ஓடிட முயன்று
மயங்கிக் கீழே அவனும் விழுந்தான்
பேச்சும் மூச்சும் அடங்கியே மடிந்தான்
"அந்தோ மனிதா! உனக்குத் தேவை
ஆறடி நிலமே அதற்கும் மேலே
எதற் கித்தனை ஓட்டமும் அயர்வும்?"
அவனுள் அடங்கும் சுவாசக் காற்று
பேசிய உண்மை பொதுவில் யாவரும்
அறிய வேண்டும் ஒப்பிலா உண்மை!!

(ரஷ்யக் கதையை தழுவி எழுதியது)

Dr. அலர்மேலு ரிஷி
More

எப்போதும் கிறுக்குவதில்லை......
யூஸ் அன்ட் த்ரோ
Share: 




© Copyright 2020 Tamilonline