Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
அதுவா முக்கியம்
மங்கலப் பொங்கல்
முரண்கள்
- தி. சிவகுமார்|ஜனவரி 2004|
Share:
வாழ்முறை மதங்களில் வெறியினை வைத்தாய்
மொழிகளின் இடையில் வெறுப்பை வைத்தாய்
அமைதியின் நிலையில் யுத்தம் செய்தாய்
சொற்களின் புரிதலில் இழுக்குச் சேர்த்தாய்
உயிர்க்கொலை புரிதலும் வீரம் என்றாய்
மானுடம் தன்னில் வேற்றுமை வைத்தாய்

சுடர்விடும் அறிவினில் மடமைகள் வைத்தாய்
அறிவின் பயன்களில் அழிவைச் சேர்த்தாய்
சிந்தனை, செயல்களில் சிதைவும் வைத்தாய்
செயல்திறன் இருப்பினும் வெற்றியை மறைத்தாய்
வீரியம் கொடுத்துச் சஞ்சலம் செய்தாய்
எண்ணத் துணிச்சலில் தளர்ச்சிகள் வைத்தாய்
அறிவுடை மூளையில் ஆத்திரம் வைத்தாய்
வெற்றியின் மகிழ்ச்சியில் தோல்வியைச் சேர்த்தாய்
நிறைவின் இடையினில் முரண்கள் படைத்து
குறைகளை உணர்த்தக் காரணம் கேட்டேன்
'குறைகளும் முரண்களும் இலையெனில் வாழ்க்கையில்
நிறைகள் நீ எங்ஙனம் உணர்வாய்?' என்றான்.

தி. சிவகுமார்
More

அதுவா முக்கியம்
மங்கலப் பொங்கல்
Share: 




© Copyright 2020 Tamilonline