Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2003 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
இது அடுக்குமா?
- வடுவூர் கிருஷ்ணன்|ஜூன் 2003|
Share:
கற்பனைக் கெட்டாத உயரத்தில் வானில்
கல்பனா செய்தனள் விண்வெளி ஆராய்ச்சி
புவிக்கு அவள் திரும்பிவிட்டால்
போய்விடும் இன்றோடு நமது ஆட்சி
நூறுகோடி இந்தியர் பெறுவர் மாட்சி
வையகம் பாடிடும் இவளது புகழ்ச்சி
எழுவரும் இறங்கினால் இதிகாசம் உருவாகும்
விண்ணுலக இரகசியம் வேரோடு வீழுமென
வானவர் செய்தனரோ சூழ்ச்சி!!

விண்கலம் மண்ணோக்கி புறப்பட
கண்ணை கசக்கி கண்னியில் கண்டனர்
நாடே போற்றும் நாசா விஞ்ஞானிகள்
கூடாது இம்முமுயற்சி திருவினையாகவென
கூடிச்சதி செய்ததோ இயற்கை!
கலம் சில நொடிகளில் கரைசேரும்
களிப்புடன் வெற்றியே என நினைக்க
வெடித்துச் சிதறிய விண்கலக் காட்சி
விட்டகலுமோ மனதை! அய்யகோ
என்னே அதிர்ச்சி!!
கல்லுள் தேரைக்கு நீர் தந்து
கருவில் உருவுக்கு உயிர் தந்து
மண் மரத்துக்கும் மழை தந்து
காலம் காலமாய் காத்தவன் இன்று
ஆலகாலமாய் ஆனது அடுக்குமா?

வடுவூர் கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline