Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
பனிப்புயல்
மணற்கோவில்
- பாகிரதி சேஷப்பன்|நவம்பர் 2002|
Share:
மாலைப் பொழுதின் மஞ்சள் வெயிலில்
மாண்புற எழுந்தது வைரக் கோபுரங்கள்.
மழலைச் சிறார்களின் மங்களக் கரங்களில்
மிகுந்து சமைத்த மணற்குவை அமைப்புக்கள்.

பிஞ்சு மனங்களின் விஞ்சிய கற்பனைக்
கோவில்கள், குளங்கள், கோபுர மாடங்கள்
குச்சிகளால் எழுப்பிய கொடிகள், தூண்கள்
கற்களில் வலம்வரும் தொண்டர் படைகள்.

வாயிலெ வருகுது நாதஸ்வர மேளங்கள்
'டும்,டும்', 'பீ,பீ'க்கு முன் வேறெது வாத்தியம்?
மலர்கள் வைத்து சிங்கார அலங்காரம்
இலைகள் தழைகள் தேர்களாம், சீர்களாம்.

கோடைக்கு இந்தியா சென்ற சிறுமிக்கு
அதிசயம், ஆனந்தம், அத்தனையும் புதுமை.
பொம்மையும் பந்தும் வேண்டாம் அம்மா
போதும் இந்தியா என்கிறாள் அவள்.
பாகீரதி சேஷப்பன்
More

பனிப்புயல்
Share: 




© Copyright 2020 Tamilonline