Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஸ்ருதி ஸ்வர லயா: 22ஆம் ஆண்டுவிழா
அரங்கேற்றம்: நிகித்தா
அரங்கேற்றம்: ஷ்ரேயா கண்ணா & சமிக்ஷா ஸ்ரீராம்
நிருத்யநிவேதன்: நிருத்ய சமர்ப்பணம்
அரங்கேற்றம்: அர்ஜுன் - அஷ்வின்
அரோரா: வறியோர்க்கு உணவு
நிருத்யோல்லாசா: நூறாவது அரங்கேற்றம்
நாதநிதி: 30வது ஆண்டு விழா
- நிருபமா வைத்தியநாதன்|செப்டம்பர் 2019|
Share:
ஆகஸ்ட் 3, 2019 அன்று, குரு ஸ்ரீகாந்த் சாரி நடத்திவரும் நாதநிதி இசைப்பள்ளி, தனது 30ம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஸ்ரீகாந்த் வீணை இசையை விரிகுடாப் பகுதியில் கற்பித்து வருகிறார். இந்த விழா, 'ராமபக்தி' என்ற கருத்தில் அமைந்திருந்தது. தியாகராஜரின் கிருதிகளில் மிளிரும் ராம பக்தியை நிகழ்ச்சி பிரதிபலித்தது. கிருதிகளை ஆராய்ந்து சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஆத்மநிவேதனம், விராஜம், தன்மயத்வம் மற்றும் முக்தி என்ற முக்கியமான அம்சங்களை விவரிக்கும் கீர்த்தனைகளை ஸ்ரீகாந்த் சாரி தேர்ந்தெடுத்திருந்தார்.

பல்வேறு படிநிலைகளில் இருக்கும் மாணவர்கள் லால்குடி பாணியில் கிருதிகளை வாசித்தார்கள். குரு ஸ்ரீகாந்த் பேசுகையில், குரு லால்குடி ஜெயராமனின் முன்னோர்கள் தியாகராஜரிடம் இசை கற்றுக் கொண்டதாகவும், தமது இசைப்பள்ளியின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தியாகராஜரின் பக்தி ததும்பும் இசை மேடையேறுவது பொருத்தம் என்றும் கூறினார்.

ஸ்ரீகாந்த் எல்லா மாணவர்களுடனும் சேர்ந்து வாசித்தார். ஸ்ரீராம் பிரம்மானந்தம் தனது சிஷ்யர் அருண் ஸ்ரீராமுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்தார். சென்னையிலிருந்து டெல்லி சுந்தர்ராஜன், வசுதா ரவி, எஸ்.வி. ரமணி ஆகிய இசைக் கலைஞர்கள் வந்திருந்தார்கள்.

அரங்கத்தின் முன்னறையில் அழகான ராமர் மண்டபம் ஒன்று அமைத்து அதில் ராமபக்தியை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் பொருட்களை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தார்கள். நிகழ்ச்சியின் உச்சமாக, இறுதியில் குரு ஸ்ரீகாந்தை ஓர் ஆசனத்தில் அமர்த்தி, சால்வை போர்த்தி, ஒரு தாம்பாளத்தில் அவருடைய பாதங்களை வைத்து, ரோஜா மலர்களைத் தூவி நமஸ்காரம் செய்தது நெகிழ்ச்சியைத் தந்தது. இந்த கௌரவத்தை, குருவுக்கு எதிர்பாராமல் செய்து மகிழ்ச்சியில் அவரை ஆழ்த்தினார்கள்.
நிருபமா வைத்யநாதன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

ஸ்ருதி ஸ்வர லயா: 22ஆம் ஆண்டுவிழா
அரங்கேற்றம்: நிகித்தா
அரங்கேற்றம்: ஷ்ரேயா கண்ணா & சமிக்ஷா ஸ்ரீராம்
நிருத்யநிவேதன்: நிருத்ய சமர்ப்பணம்
அரங்கேற்றம்: அர்ஜுன் - அஷ்வின்
அரோரா: வறியோர்க்கு உணவு
நிருத்யோல்லாசா: நூறாவது அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline