Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
ஒரு பறவையை வரைவது
இல்லாத வீடு
கனவின் நகல்
ஒற்றைத் திறவுகோல்
அப்பாவின் பேச்சு
- சுந்தர்ஜி ப்ரகாஷ்|ஜனவரி 2019|
Share:
யாரிடமும்
அப்பா இப்போது பேசுவதில்லை.

எழுந்தவுடன்
நாட்காட்டியைப் புதுப்பிக்கும் ஆர்வம்
குறைந்து போய்விட்டது அவரிடம்.

கிளர்த்தும் இசையோ
சமையலறை மணமோ
அவரின் மனச்சுவரை எட்டுவதில்லை.

வாசல் வராந்தாவில்
பேசிக் கொண்டிருக்கும்
மாலைநேரப் பறவைகள்
அவரை ஈர்க்கின்றன.

எதிர்பாராது வந்து நனைக்கும்
மழை இரவுகளில்
அவரது புன்னகை
உற்சாகம் ஊட்டுகிறது.

செய்தித் தாட்களை
வாசிப்பதைக் காட்டிலும்
விலைக்குப் போடுவதில்
ஆர்வம் காட்டுகிறார்.

அவர் காலத்தின் கதாநாயகிகள்
முதிர்ந்து மடியும் நாட்கள்
மிகுந்த துயர் நிறைந்தவை ஆகின்றன.

முழு நிலவு மணக்கும்
அகால இரவுகளை
மலர்ச்சியுடன்
சாளர வழியே பருகுவதை
நேற்றிரவு கண்டேன்.

இந்தக் கவிதையின்
முதல் வாக்கியம் எத்தனை பிழையானது என்பதை
இந்த வாக்கிய இறுதியில்
உணர்கிறேன்.
சுந்தர்ஜி ப்ரகாஷ்
More

ஒரு பறவையை வரைவது
இல்லாத வீடு
கனவின் நகல்
ஒற்றைத் திறவுகோல்
Share: 




© Copyright 2020 Tamilonline