Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
சுகுமாரனுக்கு இயல் விருது - 2016
செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம்
கொலம்பஸ்: TNF மாநாடு
டென்னசி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன்
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது
- செய்திக்குறிப்பிலிருந்து|ஜனவரி 2017|
Share:
தமிழின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான வண்ணதாசனுக்குத் தமிழுக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஒரு சிறு இசை' என்னும் படைப்பை விருதுக்குரியதாக டாக்டர் டி. செல்வராஜ், டாக்டர் கே.எஸ். சுப்ரமணியன், டாக்டர் எம். ராமலிங்கம் அடங்கிய குழு தேர்ந்தெடுத்துள்ளது. வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். விமர்சகரும், சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான தி.க. சிவசங்கரனின் மகனான இவர், கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகளையும் எழுதிவருகிறார். நா. பார்த்தசாரதியின் 'தீபம்' இதழில் துவங்கிய இவரது எழுத்துப் பயணம் இன்றும் வற்றாத ஊற்றாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'கலைக்க முடியாத ஒப்பனைகள்', 'சமவெளி', 'கனிவு', 'நடுகை', 'பெயர் தெரியாமல் ஒரு பறவை', 'கிருஷ்ணன் வைத்த வீடு' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளாகும். 'புலரி', 'முன்பின்", 'அந்நியமற்ற நதி', 'மணல் உள்ள ஆறு' போன்றவை குறிப்பிடத்தகுந்த கவிதைத் தொகுப்புகளாகும். இதுதவிர, 'அகமும் புறமும்' என்ற கட்டுரை தொகுப்பும், வண்ணதாசன் கடிதங்கள் என்ற தொகுப்பு நூலும் வெளியாகியுள்ளன. கலைமாமணி, இலக்கியச் சிந்தனை உள்படப் பல விருதுகளைப் பெற்றவர். சமீபத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக வழங்கப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதுக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆற்றொழுக்கான நடையில் செல்லும் அமைதியான ஓடம் போன்றது இவரது எழுத்து என்ற மதிப்பீடு உண்டு. எதார்த்தவாத அழகியலை முன்னிறுத்தி எழுதியவர். இவரது பல சிறுகதைகள் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கேடயமும், பரிசுத்தொகை ரூபாய் 1 லட்சமும் கொண்டது சாகித்ய அகாதமி விருது. வண்ணதாசனுக்குத் தென்றலின் வாழ்த்துகள்!
செய்திக்குறிப்பிலிருந்து
More

சுகுமாரனுக்கு இயல் விருது - 2016
செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம்
கொலம்பஸ்: TNF மாநாடு
டென்னசி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன்
Share: 




© Copyright 2020 Tamilonline