Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோ தங்க முருகன் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
ராதிகா விஸ்வநாதன் நடன அரங்கேற்றம்
இல்லினாய்: வீடற்றோருக்கு உணவளித்தல்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
சாண்டியேகோ தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
விவ்ரித்தி 2011
சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் விஜயம்
பால்டிமோர் முருகன் கோவிலில் 'பராபரம்'
சிகாகோவில் 'ஹரியுடன் நான்' குழு மெல்லிசை
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
- போதகர் பால்மர் பரமதாஸ்|ஜனவரி 2012|
Share:
கிறிஸ்து பிறந்த நன்னாளை ஒட்டி அட்லாண்டா தமிழ் சபை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறி முடிந்தன. ஆரம்ப கட்ட நிகழ்ச்சியாக சபையார் வீடு வீடாகப் போய் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடி தேவ செய்திகளை அறிவித்தனர். குறிப்பாக இவ்வாண்டு குளோபல் மால் என்ற இந்திய கடைகள் நிறைந்த இடத்தில் கிறிஸ்துமஸ் பாடல்களை வாராவாரம் பாடினர்.

அடுத்த கட்டமாக வாலிபர் சிறுவர் கிறிஸ்து பிறந்த்த நாள் நிகழ்ச்சி டிசம்பர் 18ம் தேதி அன்று நடைபெற்றது. அவர்கள் கிறிஸ்து பிறப்புப் பாடல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடினர். இயேசு நமக்காகப் பரலோகத்தில் இறைவனிடம் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார் என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஒரு சிறப்புக் குறுநாடகம் நடைபெற்றது. பின் சிறுவர்கள் அழகான‌ கிராமிய நடனம் வழங்கினர். "பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பொறுப்பு" என்ன‌ என்று போதகர் பால்மர் பரமதாஸ் செய்தி பகர்ந்து கொள்ள. கிறிஸ்துமஸ் தாத்தா சிறு பிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளித்தார்.

டிசம்பர் 25 அன்று ஏற்ற நேரத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை தொடங்கியது. குழுவினர் பாடல்களைப் பாடினர். 'இயேசு கிறிஸ்து பூலோகத்திற்கு வந்த நோக்கம்' என்னவென்று போதகர் பால்மர் பரமதாஸ் சிறப்புரை ஆற்றினார். தொடந்து சபை நிர்வாகக் குழு தலைவர் சகோ. ஆன்டனி அற்புதராஜ் வருடாந்திர அறிக்கை வாசிக்க, ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் விருந்துடன் விழா இனிதே நிறைவ‌டைந்த‌து.
போத. பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா
More

சிகாகோ தங்க முருகன் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
ராதிகா விஸ்வநாதன் நடன அரங்கேற்றம்
இல்லினாய்: வீடற்றோருக்கு உணவளித்தல்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
சாண்டியேகோ தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
விவ்ரித்தி 2011
சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் விஜயம்
பால்டிமோர் முருகன் கோவிலில் 'பராபரம்'
சிகாகோவில் 'ஹரியுடன் நான்' குழு மெல்லிசை
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
Share: 




© Copyright 2020 Tamilonline