Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராதிகா, ரம்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டியம்
செல்சி தாஸ் பரதநாட்டிய அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதி தமிழர் விழா
சுப்ரஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழா
கான்கார்ட் முருகன் கோவிலுக்குத் தைப்பூச பாத யாத்திரை
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா
டாக்டர் பத்ரிநாத்துக்கு மிசௌரி பல்கலை கௌரவப் பட்டம்
சன்னிவேல் பாலாஜி கோவில் 7வது ஆண்டு விழா
- மஹாலக்ஷ்மி வி. தாசி|மார்ச் 2011|
Share:
2011 பிப்ரவரி 10 முதல் 13 வரை சன்னிவேலில் உள்ள பாலாஜி கோவில் தனது ஏழாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. முதல் நாள் ரதசப்தமி அன்று சுவாமி நாராயணானந்தா புண்யாவசனம், கலச பூஜை ஆகியவற்றோடு விழாவைத் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளன்று நவக்கிரக பூஜை, மஹாலக்ஷ்மி அபிஷேகம், அன்னபூர்ணேஸ்வரி பூஜை ஆகியன நடைபெற்றன. அபிஷேகத்தின் போது லலிதா சஹஸ்ரநாமம், மஹிஷாசுர மர்தினி ஆகிய தோத்திரங்கள் ஓதப்பட்டன.

மூன்றாவது நாளன்று ஸ்ரீ பாலாஜியின் திருமூர்த்தத்துக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. இந்தப் பணியில் சுவாமி நாராயணானந்தாவுக்கு பிரபுராம், பார்த்தசாரதி, ராம் கோடேஷ்வராவ் ஆகிய அர்ச்சகர்கள் உதவினர். பின்னர் ஸ்ரீ பாலாஜிக்கு முத்தங்கி சேவை செய்யப்பட்டது.

நான்காம் நாளன்று விஷ்ணு சகஸ்ரநாமாவளியுடன் அர்ச்சனை நடந்தது. பெயர்கூற விரும்பாத அன்பர் ஒருவர் பாலாஜி கோவிலுக்கு கொடையாகத் தந்த 25 ஏக்கர் பரப்புள்ள ஹோலிஸ்டர் தோட்டத்துக்கு பக்தர்கள் அன்று சென்றனர். அங்கே அங்கே சுவாமிஜி அருளுரை வழங்கினார். பின்னர் திரு. பிரபு கோயல் கோவிலைப் பற்றிய பிரசுரத்தை வெளியிட்டுப் பேசினார். அடுத்து திருமதி லக்ஷ்மி விட்டல்தாசி, திரு மஹேஷ் நிலானி ஆகியோர் பேசினர். திரு. பத்மநாப ராவ் ஆண்டறிக்கை வாசித்தார். மாதந்தோறும் கோவிலில் இலவச மருத்துவப் பரிசோதனை நடத்த உதவும் டாக்டர் அஷோக் குமார் பெங்களூருவில் தினந்தோறும் இலவசப் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறினார்.

வாசவி சேவா அறக்கட்டளையின் திரு. ராவ் பனகண்டே நன்றியுரை வழங்கினார். பக்தர்களுக்கு சால்வை, புடவை மற்றும் மாலைகளை சுவாமிஜி வழங்கினார்.
மஹாலக்ஷ்மி வி. தாசி
More

ராதிகா, ரம்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டியம்
செல்சி தாஸ் பரதநாட்டிய அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதி தமிழர் விழா
சுப்ரஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழா
கான்கார்ட் முருகன் கோவிலுக்குத் தைப்பூச பாத யாத்திரை
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா
டாக்டர் பத்ரிநாத்துக்கு மிசௌரி பல்கலை கௌரவப் பட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline