Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
முரளி
ஸ்வர்ணலதா
ஆர்.சூடாமணி
- |அக்டோபர் 2010|
Share:
பிரபல எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஆர்.சூடாமணி (80) செப்டம்பர் 13 அன்று சென்னையில் காலமானார். 1931ம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். 'காவேரி' என்னும் இவரது முதலாவது சிறுகதை 1957ல் வெளியாயிற்று. சுதேசமித்திரன், கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இவருடைய கதைகள் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றன. 'ஒளியின் முன்' என்ற இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 1959ல் வெளியானது. சிறுகதை, நாவல், நாடகம் என படைப்புத் துறையின் சகல தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்த சூடாமணி, ஆங்கிலத்தில் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆக்கங்களைச் செய்திருக்கிறார். மத்தியதர வாழ்க்கையையும் அதன் மாந்தர்களையும், பெண்களது பிரச்சனைகளையும் மிகச்சிறப்பாகத் தனது படைப்புகளில் கையாண்டிருக்கும் இவர், சிறந்த உளவியல் எழுத்தாளர் என்று போற்றப்பட்டவர். தரமான சிறுகதைகளைத் தமிழில் தந்தவர். இலக்கியச் சிந்தனை விருது உட்படப் பல்வேறு விருதுகளையும், பதிப்பாளர் சங்கத்தின் சிறப்பு விருதினையும் பெற்றவர். பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி. மொழிபெயர்ப்பாளர் பத்மாசனி மற்றொரு சகோதரி. பாட்டி ரங்கநாயகி அம்மாள் அக்காலத்து எழுத்தாளர்களுள் ஒருவர்.

More

முரளி
ஸ்வர்ணலதா
Share: 




© Copyright 2020 Tamilonline