Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
இளம் சாதனையாளர்கள்
ஸ்ரீலங்காவின் அகதி முகாமில் உள்ள தமிழருக்கு உதவக் கலைநிகழ்ச்சி
ஸ்ரீ லங்கா தமிழருக்கு உதவி
- கௌரி மகேந்திரன், மதுரபாரதி|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeஆங்கிலத்தில்: கௌரி மகேந்திரன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி

நாங்கள் செட்டிகுளத்தை ஜூன் 9, செவ்வாய்க் காலையில் அடைந்தோம். சின்மயா மிஷன் தொண்டர்கள் சிலர், 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களோடு அங்கே போயிருந்தோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக பால்பொடி, பிஸ்கட், குழந்தைகளுக்குச் சத்துமாவான 'சமபோஷா', பற்பசை, பிரஷ், துண்டு, படுக்கை விரிப்பு, சிறுவருக்கு தொப்பி, டெட்டால் சோப்பு ஆகியவற்றைத் தனித்தனிப் பொட்டலங்களாகப் போட்டிருந்தோம். ஏறக்குறைய 1000 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ 2000 மதிப்புள்ள பொருள்களை நாங்கள் அன்றைக்கு வினியோகித்தோம்.

சமுதாய சேவை மற்றும் சமூகநலத் துறையின் ஒத்துழைப்போடு நாங்கள் இந்த உதவிகளைச் செய்ய முடிந்தது. சமீபத்தில் வந்த அகதிகள் குழுவைக் கொண்ட 4-வது மண்டல முகாமை நாங்கள் சென்றடைந்தோம். கிராமசேவகரின் உதவியோடு 3வது பிளாக்கில் இருந்த 815 குடும்பங்களை இனங்கண்டு கொண்டோம். காலையில் 10 மணிக்குத் தொடங்கிய வழங்கும் பணி முடியும்போது மாலை 5 ஆகிவிட்டது. நடுநடுவே அவர்கள் தங்கள் உணவைப் பெறவும் போக வேண்டியிருந்தது. அவர்களுக்கு அரசு பங்கீட்டு அட்டைகள் வழங்கியுள்ளது. எங்கள் பொருட்களைக் கொடுத்ததும் அதில் நாங்கள் கையொப்பமிட வேண்டியிருந்தது. மீதமிருந்த 242 பொட்டலங்களை மற்றொரு முகாமில் இருந்தவர்களுக்குக் கொடுத்தோம். 100 பொட்டலங்கள் இந்துப் பூசாரிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன.

உயிர் வாழவே போதியதண்ணீர் இல்லாத நிலையில் வறண்ட நாவுகளில் எழும் 'தண்ணீர், தண்ணீர்' என்ற அவலக் குரல் எங்கெங்கும் எதிரொலிக்கிறது. சொறிசிரங்கு, சின்னம்மை, வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் பலர் அவதிப்படுகின்றனர்.
15லிருந்து 20 வயதுக்குட்பட்ட கருவுற்ற இளம்பெண்களும், பல அனாதைச் சிறுமிகளும் அங்கே இருந்தனர். போர் நடக்குமிடத்திலிருந்து தப்பிக்க முயன்றதில் குடும்பத்தினரைப் பிரிந்த பல சிறார்கள் அங்கே இருந்தனர். மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அதிகாரிகள் பிற முகாம்களில் இருப்போரின் பெயர்களை அறிவிக்கின்றனர். இதன்மூலம் குடும்பத்தினரை ஒன்று சேர்க்கலாம் என நம்புகின்றனர்.

குடிநீர்க் குழாய்களும், ஆழ்துளைக் கிணறுகளும் ஆங்காங்கே உள்ளன என்றாலும் பொதுவாகப் புதிய முகாம்களில் குடிநீர் வசதி போதாது என்பதுதான் உண்மை. உயிர் வாழவே போதிய தண்ணீர் இல்லாத நிலையில் வறண்ட நாவுகளில் எழும் 'தண்ணீர், தண்ணீர்' என்ற அவலக் குரல் எங்கெங்கும் எதிரொலிக்கிறது.

சொறி, சிரங்கு, சின்னம்மை, வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் பலர் அவதிப்படுகின்றனர். மருத்துவச் சேவைக்கு உடனடித் தேவை உள்ளது.
மிகத் தேவையான கட்டத்தில் எம் சகோதரருக்கு நம்மாலானதைச் செய்தோம் என்ற உணர்வோடு நாங்கள் மாலை 6 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம். கடல் போன்ற துயர நேரத்தில் நாங்கள் செய்தது ஒரு துளிதான். தொடர்ந்து செய்வோம், உங்கள் அன்பான ஒத்துழைப்போடு.

இணையதளம்: www.cordsrilanka.org

இந்தச் சோகமான தருணத்தில் சகோதரருக்கு உதவ நீங்கள் விரும்பினால், 'Chinmaya Mission West' என்ற பெயரில் காசோலைகளை அனுப்ப வேண்டும். காசோலையில் கீழே "CORD-Sri Lanka" என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323

அனுப்ப வேண்டிய முகவரி:
Chinmaya Mission West,
Meera Raja,
2246 West Cullom Ave.,
Chicago, IL 60618, USA.

ஆங்கிலத்தில்: கௌரி மகேந்திரன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி
More

இளம் சாதனையாளர்கள்
ஸ்ரீலங்காவின் அகதி முகாமில் உள்ள தமிழருக்கு உதவக் கலைநிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline