Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2000 Issue
ஆசிரியர் பக்கம் | அமெரிக்க அனுபவம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | சமயம் | சினிமா சினிமா | சிறுகதை | பொது | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
வானவில்! - ஹைக்கூ கவிதைகள்
எச்சம்
வர்ண சிநேகிதம்
ஜன்னல் மனிதர்கள்
விளையாட்டு
- பாப்லோ அறிவுக்குயில்|டிசம்பர் 2000|
Share:
Click Here Enlargeவழக்கம் போல்
கத்திக் கதறி
சங்கு ஊதி
அடம் பிடிக்காமல்
அமைதியாய் விளையாடும்
மகளிடம் கேட்டார் தந்தை :
‘’என்னம்மா செய்யுறே?’’
‘’வெளாடுறேம்பா’’
எச்சிலோடு புன்னகையும்
ஒழுகிப் போயிருந்தது.
‘’என்ன வெளையாட்டு?’’
‘’கடவுள் வெளயாட்டு’’
தூசு படிந்த விழிகளோடு
விம்மும் அவள் குரல்.
ஆச்சர்யம் தலை தூக்கியது
பச்சைப் பாம்பாய்.
‘’என்ன கடவுள்?’’
‘’அம்மாக் கடவுள்’’
முன்பே பதிவு செய்ததைப் போல்
ஒவ்வொன்றாய்த்
தேர்ந்த சொல்லில்
பேசினாள் சிறுமி.
‘’புரியலியே,’’
‘’யேங்கூட வெளாண்டக் கடவுள
தூக்கிக் கெடாசிட்டேன்.’’
‘’ஏம்மா?’’
‘’வெளையாட கூட்டிக்கிட்ட அம்மாவ
ஏன் அனுப்புல... அதான்...’’
குழந்தை யிடமிருந்து
வெளிவந்த காங்கல்
உக்கிரமாய்த் தாக்க
உறைபனி உருகி
உப்புப் பரல்களாய்க்
கசிந்தன.
அவள் வீசியெறிந்த
கடவுள்
தொங்கி கிழிந்து குடல் சரிந்து
வீதியில் கிடந்தார் நாதியற்று.

பாப்லோ அறிவுக்குயில்
More

வானவில்! - ஹைக்கூ கவிதைகள்
எச்சம்
வர்ண சிநேகிதம்
ஜன்னல் மனிதர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline