Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
இலக்கியம்
கோபத்தின் கொடுமை
- பெரியண்ணன் சந்திரசேகரன்|மார்ச் 2007|
Share:
Click Here Enlargeஅம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை.

அம்பலவாணக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை என்னும் தமிழிசை நாடகக் கீர்த்தனை இயற்றிய அருணாசலக் கவிராயரின் சிற்றப்பா ஆவார்.

அறப்பளீசுரக் கோவில் சிவன் மேல் பாடிய நூறு பாட்டுக்களுள் ஒன்று இது. எளிய நடையில் இருப்பதால் விளக்கம் வேண்டியதில்லை.

கோபமே பாவங்க களுக்கெலாம் தாய்தந்தை;
கோபமே குடிகெடுக்கும்;
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது;
கோபமே துயர்கொடுக்கும்;
கோபமே பொல்லாது; கோபமே சீர்கேடு;
கோபமே உறவறுக்கும்;
கோபமே பழிசெய்யும்; கோபமே பகையாளி;
கோபமே கருணை போக்கும்;
கோபமே ஈனமாம்; கோபமே எவரையும்
கூடாமல் ஒருவன் ஆக்கும்;
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநரகக்
குழியி னில்தள்ளுமால்;
ஆபத் தெலாம்தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதேவனே!
[துயர் - துயரம், துன்பம்; ஈனம் - கீழ்மை, இழிவு; ஒருவனாக்கும் - நட்புறவு இன்றித் தனிமனிதனாக்கும்; மறலி - எமன்; மதவேள் - வலியதலைவன், முருகன்; சதுரகிரி - சேலம் கொல்லிமலை]

தேர்ந்தெடுத்து வழங்கியவர்: பெரியண்ணன் சந்திரசேகரன்
Share: 




© Copyright 2020 Tamilonline