Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
அக்டோபர் 2005 : வாசகர் கடிதம்
- ராஜி கிருஷ்ணன்|அக்டோபர் 2005|
Share:
செப்டம்பர், 2005 தென்றல் இதழில் டாக்டர் செளந்தரம் அவர்கள் பற்றி முனைவர் அலர்மேலு ரிஷி எழுதிய கட்டுரையைப் படித்து மனம் நெகிழ்ந்தேன். ஓய்வில்லாது, விளம்பரம் விரும்பாது, தாய்க்குலத்துக்கு அவர் செய்த தொண்டு அனைத்தையும் விவரித்திருக்கிறார் கட்டுரையாளர். செளந்தரம் அம்மையை அறிந்த ஒவ்வொருவரும், தாம் அறிந்த சிறந்த கர்மயோகி அவர் எனக் கண்ணில் நீர்மல்கிக் கூறுவர்.

அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கே கூட ''அடடா! அம்மாவின் இந்தப் பணி பற்றி எனக்குத் தெரியாதே?" என்று அவர்கள் வியக்கும் அளவுக்கு சமுதாயத்துக்கும், தம் விரிந்த உலகில் அவர் கண்ட தனிமனிதர்களுக்கும் அவர் காட்டிய அன்பும் செய்த தொண்டும் கூற இயலாதது. பண்பும், பரந்த மனமும் கொண்ட அவரது பெற்றோரின் துணை கொண்டே அவர் பெரும் சாதனைகள் புரிய முடிந்தது. அவரது இரண்டாவது மணத்தை அவர்கள் ஒப்பவில்லை என்றாலும், காந்தி கிராமத்திற்கு நிலம் வழங்கி, நிதி அளித்து, அவருக்குதவி வந்தனர். ஆதி நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும் அவரது பணிகளுக்கெல்லாம் நிதியும் ஆதரவும் அளித்து வருகின்றனர் அப்பெரியோரின் சந்ததியார்.
சௌந்தரம் அவர்களைப் பாராட்ட முழுவருடத் திருவிழா ஒன்று சரோஜினி வரதப்பன் அவர்கள் பொறுப்பில், சென்னையில், முன்னாள் ஜனாதிபதி வெங்கடராமன் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. அப்போது நான் இந்தியாவுக்குச் சென்றிருந்த சமயம். அதிலே சௌந்தரம் அவர்களின் தொண்டைப் புகழ்ந்து பாட நான் பெற்ற வாய்ப்பை நான் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

ராஜி கிருஷ்ணன்
ப்ராவிடன்ஸ், ரோட் ஐலண்டு.
Share: 




© Copyright 2020 Tamilonline