Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி!
NRI செய்திகள்
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்!
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
FeTNA: தமிழ் விழா குறும்படப் போட்டி
Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி
ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு
- அ. முத்துலிங்கம்|ஏப்ரல் 2014|
Share:
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) ஞாயிறு மாலை 9 மார்ச் 2014 அன்று ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் தமிழ்க் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் பக்கத்துப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நூலுக்கான தேர்வுக்குழு 400க்கு மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து தகுதிபெற்ற 78 கவிதைகளைப் பதிப்பித்திருக்கிறது. எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா), மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செல்வா கனகநாயகம் தொகுப்பை மேம்படுத்தியிருக்கிறார். முதன்முறையாக இப்படியான இருமொழி நூல் ஒன்றுக்கு ஒன்ராறியோ ட்ரில்லியம் அமைப்பு நிதியுதவி வழங்கி ஆதரித்திருக்கிறது.

இந்த அமைப்பின் தலைவி சாவி சிங் நூலை வெளியிட்டு வைத்தார். விழாவில் பேரா. செல்வா கனகநாயகம், பேரா. சாஷா எபெலிங், பேரா. அனுஷ்யா ராமஸ்வாமி, முனைவர் மைதிலி தயாநிதி, வழக்குரைஞர் மனுவல் ஜேசுதாசன், கவிஞர் சேரன், கவிஞர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். ஜெர்மானியக் கவிஞர் ரெய்னெர் மாரியா ரில்கே அவர்களின் கவிதை வரியான In Our Translated World என்பதே நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. 'மிருகங்கள்கூட மாற்றமடைந்த ஓர் உலகில் சௌகரியமாக இருப்பதில்லை' என்கிறார் கவி. இந்த நூலின் பொதுத்தன்மை மாற்றமடையும் உலகில் வாழும் மனிதர்களைப் பற்றியது. அவர்களின் அவலங்கள், இழப்புகள், ஏக்கங்கள் நூலின் அடிநாதமாக ஓடுகிறது. மாறும் உலகில் அமைதியின்மை மனிதனை அலைக்கழிக்கிறது. விழாவுக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் பிற மாகாணங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
அ.முத்துலிங்கம்,
கனடா
More

சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி!
NRI செய்திகள்
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்!
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
FeTNA: தமிழ் விழா குறும்படப் போட்டி
Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி
Share: 




© Copyright 2020 Tamilonline