Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
யாவரும் கேளிர்
தாயைப் பெற்ற குழந்தை
- பழமைபேசி|மார்ச் 2013|
Share:
விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்!
யார் கவனித்தார்கள் அவளை?

இரண்டாம் தூணில் சாய்ந்து
அலுங்கிக் குலுங்கி
கண்ணீர் உகுக்குமந்த
ஹிஸ்பானிய இளம்பெண்ணை!

அண்டி அவளைக் கேட்கலாமா?
நூறோடு நூற்றொன்றாய்
நாமும் கடந்து சென்றுவிடலாமா?

மனத்துக்குள் நிகழ்ந்த
சஞ்சலப்புயல் ஓயந்தபின்
ஏங்க, உங்களுக்கு உதவி ஏதும்?
சென்று வினவியதற்கு
உகுத்த கண்ணீர் துடைத்து
அமைதியாய் மறுமொழிந்தாள்
நன்றி! நீங்கள் கவலைப்படாதீர்கள்!
யாரோ வீசிச்சென்ற இக்குழந்தையை
தத்தெடுத்து வளர்க்கும் என்னை
இன்று
இப்போதுதான்
முதன்முதலாய்
மாமி மாமி எனச்சொல்லி
அழைக்கத் துவங்கியிருக்கிறாள்!

ஏதுமறியாப் புன்னகையுடன்
எங்களைப் பார்த்துச் சிரித்த
அக்குழந்தையின் கண்களில்
தாயொன்றின் பிரசவம்!
பழமைபேசி,
கோலியர்வில், டென்னசி.
More

யாவரும் கேளிர்
Share: 




© Copyright 2020 Tamilonline