Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
பாரதி
- இரவீந்திர பாரதி|டிசம்பர் 2012|
Share:
வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது

நீ...
நெருப்பின் சிலிர்ப்பு
நெடுந்துயிலின் கண் விழிப்பு
புளியேப்பக்காரனின்
தொந்தியைத் தடவிக் கொடுக்கும்
கூலி எழுத்துக்களை
குப்புறத்தள்ளியது உன் பாட்டு

புல்லுக்குக் கூட பீரங்கியின்
வலிமையைக் கொடுத்தவன் நீ

வறண்ட நிலத்துக்கு மழையே!
வயலில் அசையும் பயிரே!

உண்ணத் தெவிட்டாத அமுதமே
உச்சி மீது தமிழை ஏற்றி நீ
உலகெங்கும் ஒளிரச் செய்தாய்...

வாழ்க நீ தமிழா!
வாழ்க நீ தமிழாய்!
இரவீந்திர பாரதி,
சிடார் ராபிட்ஸ், அயோவா
Share: 




© Copyright 2020 Tamilonline